மதுரையில் 750 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது

 

மதுரை, ஆக. 19: தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு சென்னை உணவு கடத்தல் பிரிவு தலைவர் வன்னிய பெருமாள் உத்தரவுப்படி, மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய் காரதிக் ராஜா தலைமையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மதுரை அருகே பெருங்குடி பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

மதுரை சரக டிஎஸ்பி ஜெகதீசன், மதுரை பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ வாகனத்தை சோதனை செய்த போது அதில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த செல்வகுமார், சண்முகவேல் ஆகியோரை கைது செய்து, ரேஷன் அரிசி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு