மதுரை / அலங்காநல்லூர், டிச. 25: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை கே.கே. நகரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ராஜா, திரவியம், ஜெயவேல், கருப்பசாமி, சோலைராஜா, டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அமமுக சார்பில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு எம்ஜிஆர் மன்ற செயலாளர் தண்டலை மாதவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், நகரச் செயலாளர் ராஜபிரபு, ஒன்றிய இணைச் செயலாளர் வேல்முருகன், மாணவரணி செயலாளர் அசோக், விவசாய பிரிவு செயலாளர் பிச்சை, பிரதிநிதி சுரேஷ், எம்ஜிஆர் மன்றம் ராஜா, வார்டு செயலாளர் மெடிக்கல் சுதந்திரபாண்டியன், சிறுபான்மை அணி செயலாளர் அய்யூர்ரியாஸ்கான், மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி கிராமத்தில் அதிமுக சார்பாக எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி கழக செயலாளர் கார்த்திக், கிளை கழக செயலாளர் சந்திரன், மற்றும் ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், பக்கீர்முகமது, பாலு, குமரேசன், ஞானசேகரன், கோவில்பிச்சை. உள்ளிட்டோர் எம்ஜிஆர் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.