மதுரை, ஜூலை 3: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி ேபசுகையில், ‘மதுரையில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு டவுன் பஸ்கள் செல்லாத இடங்களில் மினி பஸ்கள் தேவை உள்ளது. குறிப்பாக மாட்டுத்தாவணியிலிருந்து அனுப்பானடிக்கு அண்ணா நகர், கேகே நகர் வழியாக மினி பஸ்களை இயக்க அரசு முன்வருமா என்பதை அமைச்சர் வாயிலாக கேட்டு கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.
அதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசுகையில், ‘கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் மின் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு அரசு பஸ்கள் இயக்காத வழித்தடங்களில் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த அதிமுக கால ஆட்சியில் இந்த மினி பஸ்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மினி பஸ்களை சிறப்பாக இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் வரைவு கொள்கையை வகுத்து தர முதல்வர் கேட்டு கொண்டுள்ளார். உள்துறை செயலர் தலைமையில் அடுத்த வாரம் நடத்தப்பட இருக்கும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்னர் அவரே கேட்டு மினி பஸ்களை எந்ததெந்த வழித்தடங்களில் இயக்கலாம்’ என்றார்.