Thursday, June 27, 2024
Home » மதுரவாயலில் தனியார் யூடியூப் சேனலுக்கான கடுமையான களரி பயிற்சியின் போது மாஸ்டர் திடீர் உயிரிழப்பு

மதுரவாயலில் தனியார் யூடியூப் சேனலுக்கான கடுமையான களரி பயிற்சியின் போது மாஸ்டர் திடீர் உயிரிழப்பு

by kannappan

பூந்தமல்லி: மதுரவாயலில் தனியார் யூடியூப் சேனலில் வெளியிட  மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்த மாஸ்டர் மயங்கிவிழுந்து இறந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (29). மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் நடத்தி வந்தார். நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் மாணவர்களுக்கு களறி பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலில் களரிபயிற்சியை பதிவு செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரிதரன் நேற்று மாலை ஆன்லைன் மூலம் தனது பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்துள்ளார். அப்போது திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார். பயிற்சி மைய நிர்வாகிகள், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.மதுரவாயல் போலீசார், கிரிதரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  நெஞ்சுவலியால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

nine + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi