மதுபானம் பதுக்கிய 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

பெரம்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதனால் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி விற்க முன்கூட்டியே சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் எம்கேபி நகர் சப்-இன்ஸ்பெக்டர் கல்வியரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த வீட்டில் இருந்து 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த செல்வி(43), என்ற பெண்ணையும் கைது செய்தனர். இதேபோல் எம்கேபி நகர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி(54) என்ற பெண் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது