விருத்தாசலம், ஜூன் 23: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார், விருத்தாசலம் அருகே உள்ள தே.கோபுராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(61) என்பவரை பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 5 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபாட்டில் விற்றவர் கைது
previous post