மண், கற்கள் வெட்டி கடத்தல் கலெக்டரிடம் புகார்

சேலம், அக்.1: கெங்கவல்லி அருகே மண், கற்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கெங்கவல்லி அடுத்த கோனேரிப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறுகையில், ‘‘கோனேரிப்பட்டி பெருமாள் மலையின் அடிவாரத்தில் 30 அடி ஆழம் வரை தோண்டி, மண் மற்றும் கற்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. அத்துடன் 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்க சென்றபோது, சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பல கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி