சேந்தமங்கலம், ஜூன் 20: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் சக்திவேல் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு டிப்பர் லாரியில் மண் வெட்டி கடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
previous post