மண் கடத்தியவர் கைது

அரூர், ஜூலை 4: கோட்டப்பட்டி எஸ்ஐ விஜயன் தலைமையில் போலீசார், நரிப்பள்ளி-பெரியப்பட்டி சாலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிராக்டரில் வந்தவரிடம் விசாரித்த போது, பெரியப்பட்டி கல்தானிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம்(40) என்பதும், விவசாய தோட்டத்தில் இருந்து மண் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் 1 யூனிட் மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை