திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டிப்பர் லாரிகளில் மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர் செல்வம் பொதுமக்களிடையே ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திருவள்ளூர் அடுத்த புதூர் குவாரியில் சவுடுமண் எடுத்து செல்லும் கனரக சரக்கு லாரிகள் மூலம் எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகிறது அதனை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார். குவாரி அருகே சம்பந்தப்பட்ட அனைவரையும் குவாரி நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இக்கூட்டத்தில் லாரிகளில் அளவுக்கு அதிகமான மண் பாரம் ஏற்றி செல்வது, நகர்ப்புற சாலையில் வேகமாகவும் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குவது, லாரியின் பின்புறம் தார்பாலின் கொண்டு மூடாமலும் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் பயன் படுத்தியும் வாகனங்களை இயக்குவதே விபத்துகளுக்கு காரணம் எனவும், இவைகளை எவ்வாறு தடுக்கலாம் என்று சமீபத்தில் டிப்பர் லாரிகளால் நடந்த உயிரிழப்பு விபத்துக்களை மேற்கொள் காட்டி விளக்கமளித்தார்.இந்த விழிப்புணர்வு முகாமில் குவாரி நிர்வாகிகள் ரகுபதி, பிரதாப், திருவள்ளூர் சங்க தலைவர் சதீஷ் , ஊராட்சி மன்றத்தலைவர் சௌவுக்கார் பாண்டியன், பூந்தமல்லி சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செங்குன்றம் சங்கத் தலைவர் காமராஜர், வெள்ளவேடு சங்கத் தலைவர் தர், திருவள்ளூர் மாவட்ட அனைத்து பகுதி லாரி உரிமையாளர்கள் மண் அள்ளும் ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சுமார் 150 பேர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வத்தின் விளக்கவுரையின் இடையிடையே கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்து சட்ட விதிமுறைகளையும் எளிமையாக எடுத்து கூறி அனைவருக்கும் அவர்களின் தவறுகளையும் சுட்டிக் காட்டினார். இறுதியாக லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒருமனதாக ரீப்பர்களை அகற்றி விடுவதாகவும், தத்தம் ஓட்டுநர்களிடம் பொதுநலன் கருதி வாகனங்களை முறையாகவும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டும் விபத்துக்கள் ஏற்படாமலும் இயக்க அறிவுறுத்தி திருவள்ளூர் மாவட்ட பகுதியில் சாலை விபத்துக்களே இல்லாமல் செய்வோம் என உறுதி அளித்தனர்….
மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு
previous post