மண்வெட்டியால் தம்பியை வெட்டிய அண்ணன் கைது

நிலக்கோட்டை, ஜூலை 17: நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் காசிமாயன் (40). இவரது அண்ணன் ஆறுமுகம் (50). விவசாயிகள். இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அவரவர் தோட்டத்தில் இருவரும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மண்வெட்டியால் காசிமாயனை வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட குடும்பத்தினர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து காசிமாயன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்