மண்வளம் காக்க மானிய விலையில் பசுந்தாள் உரம்

வேப்பனஹள்ளி, ஜூன் 5: இது குறித்து வேப்பனஹள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20கிலோ பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட, உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு இணையத்தில் பதிவு செய்தல் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து விவசாயிகள் பயன் அடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை