மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விசிக முற்றுகை போராட்டம்

மதுரை, ஜூலை 22: மணிப்பூரில் பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்து தல்லகுளம் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் ஈடுபட்டனர். வழக்கறிஞர் அணி மூத்த வழக்கறிஞர் அன்பழகன் தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட சென்றனர்.அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர்.

இதனால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தில் விசிக மத்திய தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், இளஞ்சிறுத்தைகள் பாசறை செயலாளர் அரசமுத்து பாண்டி, தொண்டரணி பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை