மதுராந்தகம்: மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெற்குணம் ஆற்று பகுதியில் நேற்று அதிகாலையில் அச்சிறுப்பாக்கம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய விழுப்புரம் மாவட்டம் சாரத்தை சேர்ந்த லோகநாதன் (31), செங்கல்பட்டு மாவட்டம் பருக்கலை சேர்ந்த மோகன் (31), ஜானகிராமன் (42) ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லாரி, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….
மணல் கடத்திய 3 பேர் சிக்கினர்
previous post