மணல் கடத்திய 2 பேர் கைது

 

திருச்சி, ஜூலை 21: திருச்சியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ரங்கம் கொண்டையம்பேட்டை விஏஓ பொன்னுரங்கபுரம் கொள்ளிடம் ஆற்று பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனை நடத்தினார். அதில் 2 யூனிட் மணலை அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து விஏஓ கொடுத்த புகாரின்பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து திருவானைக்காவல் திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த தண்டபாணி (25), விஜயபாஸ்கர்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பிஓடிய திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் மணலுடன் வேனையும் பறிமுதல் செய்தனர். இதில், மணிகண்டன் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை