மணல் கடத்திய டிரைவர் கைது

விருத்தாசலம், பிப். 25: விருத்தாசலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம், சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்தி யது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டி.வி. புத்தூர் கிராமத்தை சேர்ந்த மாயவன் மகன் மணிவேல்(33) என்பவரை பிடித்து கைது செய்ததுடன், மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி