மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

 

திருவில்லிபுத்தூர், ஜூன் 19: திருவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி எஸ்ஐ நமச்சிவாயம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலந்தைகுளம் கண்மாயில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பதிந்துள்ளது. இதை மற்றொரு டிராக்டர் மூலம் இழுத்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த போலீசாரை பார்த்ததும் பதிந்த டிராக்டரை நிறுத்திவிட்டு மற்றொரு டிராக்டரில் தப்பிவிட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்