மணல் ஏற்றி வந்தவர் கைது

திருப்புத்தூர், மார்ச் 7: திருவண்ணாமலை மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன்(30). இவர், திருப்புத்தூர் அருகே மாங்குடி பகுதியில் இருந்து திருட்டு மணல் டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு திருவுடையார்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அதை வழிமறித்து விஏஓ பாலகிருஷ்ணன் ஆவணங்களை கேட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அது திருட்டு மணல் என தெரியவந்துள்ளது.

பின்னர் வி.ஏ.ஓ பாலகிருஷ்ணன் திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு மணல் ஏற்றி வந்த பாண்டியனை கைது செய்தனர். மேலும் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு