மணலி மண்டல அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிந்து நேற்று பிற்பகல் 3 மணியுடன் வாபஸ் பெறும் நேரமும் முடிந்தது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் அந்தந்த மண்டலங்களில் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் பார்வைக்காக அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டது.இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 29 ஆயிரத்து 134 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 13 ஆயிரத்து 535 மின் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மின் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மணலி மண்டலத்தில் உள்ள தனி, தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்