மணலிக்கரை

குமாரபுரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் மணலிக்கரை வாழவிளை முக்கு சந்திப்பில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சேவா தள காங்கிரஸ் தலைவர் ராபர்ட் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி தக்கலை வட்டார தலைவர் ஜெபினோ, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியவேல், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சேவா தள மாநில பொதுச் செயலாளர் குமரி அந்தோணி முத்து கலந்து கொண்டார். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு