மணமேல்குடி அருகே கணவனை பிரிந்து தனியாக வசித்த பெண் மர்மசாவு

அறந்தாங்கி, செப். 12: மணமேல்குடி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழக்காடு கரியாபட்டினம் செட்டிபுலத்தை சேர்ந்தவர் நீலாவதி (30). இவருக்கு கனிஷினி என்ற குழந்தை உள்ளது. நீலாவதி அவருடைய கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து கடந்த 6 மாத காலமாக மணமேல்குடியில் வசித்து வந்தார். குழந்தை கனிஷினி பொன்னகரம் அரசு தொடக்க பள்ளியில் படித்து வருகிறார்.நீலாவதி வீட்டிற்க்கு கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரும், மணமேல்குடியை சேர்ந்த ஒருவரும் அடிக்கடி வந்து போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நீலாவதி வீட்டை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால் அப்பகுதியை சேர்வர்கள் நீலாவதி வீட்டிற்க்கு உள்ளே சென்று பார்த்த போது கழுத்தில் சேலை சுற்றியவாறு தலையில் லேசான காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பொன்னகரம் அரசு தொடக்க பள்ளியில் படித்து வந்த கனிஷினியை அடையாளம் தெரியாத நபர் பள்ளிக்கு சென்று பெற்றோர் என கூறி அழைத்து சென்று உள்ளனர். மணமேல்குடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பெண் மர்ம சாவுக்கு காரணம் என்ன பள்ளியில் படித்த குழந்தையை அழைத்து சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி