Sunday, June 30, 2024
Home » மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 5 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி: கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 5 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி: கலெக்டர் வழங்கினார்

by kannappan

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 72 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 59 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 34 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 65 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 71 மனுக்களும்; என மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.பின்னர்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ₹4,761 வீதம் ₹23,805 மதிப்பீட்டிலான இலவச சலவைப் பெட்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளோடு சைகை மொழி பெயர்ப்பாளர் மூலம் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு,  முடநீக்கு வல்லுநர் திருமதி.ஆஷா, சைகை மொழி பெயர்ப்பாளர் திருமதி.சசிகலா  மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

13 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi