மக்கள் குறைதீர் முகாம் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

 

அரியலூர், ஆக. 22: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு மனு விசாரணை முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறுவது வழக்கம் நேற்று இந்நிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 13 மனுதாரர்கள், தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனுவை அளித்தனர். மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி