Monday, July 8, 2024
Home » மக்கள் குறைதீர் கூட்டத்தில் 266 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 266 மனுக்கள் குவிந்தன

by Francis

 

கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 266 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 266 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

13 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi