மக்கள் குறைதீர்நாளில் 565 மனுக்கள்: விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர், செப்.24: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 565 மனுக்கள் பெறப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 565 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மேற்கொள்ளுமாறு ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இலவச வீட்டு மனை கேட்டு திருநங்கைகள் மனு: குறைதீர்கூட்டத்தில் தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சி தெற்கு மானோஜிபட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் 20 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திருநங்கைகள் என்பதால் எங்களுக்கு சிலர் வாடகைக்கு கூட வீடு தரமால் உள்ளனர். இதனால் வேதனையில் உள்ளோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு பலமுறை மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்