வில்லிபுத்தூர், ஆக.1: மக்களுடன் முதல்வர் திட்டத்தால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்று யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம் தெரிவித்தார். வில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், கொத்தங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில் யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம் பேசுகையில், ‘மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை உலகமே வியந்து பாராட்டுகிறது. இந்த முகாம் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பட்டா உட்பட பல்வேறு மானிய உதவி எளிதாக கிடைத்து பயனடைந்துள்ளனர்’ என்றார். முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
previous post