மக்களின் பிரச்னை தீர்க்கப்படும்: ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் பிரச்னை, கழிவுநீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் அதனை சரிசெய்து கொடுப்பேன். குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவேன். மூலக்கொத்தலம் பகுதி மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் தருவேன். எந்த திட்டங்களையும் செய்யாத அதிமுக ஆட்சி வேண்டுமா என்பதை சிந்தித்து பாருங்கள். அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 3ம் தேதி 4 ஆயிரம் வழங்கப்படும்,’ என்றார். பிரசாரத்தின்போது, ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் கவுரீஸ்வரன் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

Related posts

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் திட்டம் தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு

சொல்லிட்டாங்க…