மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்: என்.ஆர்.தனபாலன் உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தினமும் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கி, வியாசர்பாடி முல்லை நகர் மற்றும் குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வியாசர்பாடி பகுதி மக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட தனபாலன்,   அப்பகுதி மக்களிடம் பேசுகையில், ‘வியாசர்பாடி பகுதியில் அடித்தட்டு மக்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். தரமான இலவச கல்வி, சுகாதார வசதி செய்து தரப்படும். இப்பகுதி பெண்கள் சுயதொழில் செய்ய வங்கி கடன் வழங்கப்படும். இலவசமாக தையல் மற்றும் கணினி பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதனை பயன்படுத்தி பெண்கள் தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ள முடியும். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.  பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனருந்தனர். …

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது