மகிழ்வான சுகப்பிரசவம் இருக்க சிசேரியன் எதற்கு?!

பெருகி வரும் செயற்கை கருத்தரிப்பு, குடும்பத்தினர் நண்பர்கள் கேள்விகள், குழந்தையின் கட்டாயம், என குழந்தைப்பேறு மகிழ்வான தருணத்தைக் கடந்து கட்டாயமான கடமையாகிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே ஒரு காலத்தில் தேவைக்காக மட்டுமே செய்து கொண்டிருந்த அறுவை சிகிச்சை முறையை குழந்தை பிறப்பின் போது ஏற்படும் வலிக்கு பயந்து பெண்களே சிசேரியன் முறைக்கு டிக் செய்து வருகிறார்கள். ஆனால் இப்போதைய நவீன தொழில்நுட்பத்தில் வலியே இல்லாமல் சுகப்பிரசவம் செய்து கொள்ளும் முறைகள் ஏராளமாக வந்துவிட்டன அது குறித்து விரிவாக விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ராஜேஸ்வரி வாசு (M.S (og),  Dip.Adv.Gynaec Laparoscopy) எதனால் இன்று சிசேரியன் அறுவை சிகிச்சை முறை அதிகரித்து விட்டது? இன்று தனிக்குடித்தனம் வேலைக்கு செல்லும் கணவன் மனைவி பெரியவர்கள் அருகில் இல்லாமை இப்படி பல காரணங்களால் மகப்பேறு குறித்த போதிய ஆலோசனைகளும், நம்பிக்கைகளும் பெண்களுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் இந்த மகப்பேறு வலிக்கு அதிகமாகவே தயங்குகிறார்கள். அதே போல் தண்ணீரின் அளவு உடலில் குறைந்தாலும் குழந்தையை சுற்றி இருக்கும் பனிக்குட நீரின் அளவு குறையும். இதனாலேயே பிரசவ காலத்தில் பனிக்குடம் உடைந்து சுலபமாக சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை உண்டாகிவிடும். இதுவும் கூட இன்னொரு காரணமாக சொல்லலாம். வலியின் காரணமே பல பெண்கள் பயப்படுவர்… எனில் வலியில்லாத சுகப்பிரசவம் சாத்தியமா? நிச்சயம் முடியும் நவீன முறையில் அதற்கு நிறையவே சிகிச்சை முறைகள் வந்து விட்டன. வலியில்லா பிரசவத்தில்(Painless delivery ) எபிடோரியல் கொடுப்போம். அதாவது முதுகுத் தண்டை சுற்றி மூன்று சுவர்கள் இருக்கும் அதில் வெளிப்புறத்தில் இருப்பதுதான் எபிடோரியல் பகுதி. அதிலே ஊசி மூலம் மயக்க மருந்து கொடுப்போம். பிரசவ வலி பொருத்தவரை நான்கு நிலைகளில் வரும் முதல் நிலையில்தான் மேலிருந்து கீழ்ப் பகுதி வரை வலி செல்லும். இந்நிலையில் மகப்பேறியல் நிபுணர் சொன்னபின் மயக்க மருந்து நிபுணரால் எபிடூரல் வலி நிவாரணி வழங்கப்படுகிறது. 4செ.மீ கர்ப்பப்பை வாய் திறந்தவுடன் இந்த மருந்து  கொடுக்கப்படும். இதனால் வலி இல்லாமல் பிரசவத்தை மகிழ்வாக அனுபவிக்கத் துவங்கி விடுவார்கள். குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இன்னொரு முறையில் நைட்ரஸ் ஆக்சைடு பிரசவிக்கும் பெண்ணுக்கு மாஸ்க் வழியாக கையாலேயே பிடித்து சுவாசிக்க கொடுப்பதாலும் அவர்களுக்கு வலி தெரியாது. பெரும்பாலும் சிசேரியன் முறையில்தானே முதுகுத்தண்டில் ஊசி போடுவார்கள்? அறுவை சிகிச்சை முறையிலும் சரி சுகப்பிரசவத்திலும் சரி பெண்கள் பிரசவத்திற்கு பிறகு போதுமான அளவிற்கு உடற்பயிற்சியும் தேவையான அளவிற்கு கால்சியம் நிறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். பிரசவத்திற்குப் பின் எலும்பு தேய்மானம் ஏற்படும் மேலும் குழந்தைக்கு பால் கொடுப்பதால் உடலில் கால்சியம் சத்து அதிகம் குறைபாடு ஏற்படும். இதனாலேயே அறுவை சிகிச்சையின்போது முதுகில் போடப்படும் ஊசி காரணமாக வலியை உணர்கிறார்கள். மேலும் சுகப் பிரசவத்திற்காக போடப்படும் ஊசியும் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் ஊசியும் முற்றிலுமாக வேறு வேறு. சுகப்பிரசவத்தின் போது போடப்படும் ஊசி முதுகுத்தண்டின் எபிடோரியல் பகுதியின் மேல்புறத்தில் போடுவோம். வலி ஓரிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.இன்றைய காலத்தில் வழியில்லா பிரசவத்திற்கு என்னென்ன நவீன சிகிச்சை முறைகள் உள்ளன? மாதவிடாய் தள்ளிப் போன நாளிலிருந்து கருத்தரிப்பு உறுதி செய்த நாள் முதல் அவர்களை சுக பிரசவத்திற்காக தயார்படுத்தத் துவங்கிவிட வேண்டும். பிரசவத்தின் போது சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி மற்றும் சுவாசப் பயிற்சி வகுப்புகள் , உடல் மற்றும் மனதளவில் அவர்களை தயார் படுத்துவதற்கான ஆலோசனைகளும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை கொடுக்கும். பெரும்பாலான மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் உள்ளன.  …

Related posts

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

முகம் அழகு கொடுக்கும் முட்டைக்கோஸ்!

பொடுகு பிரச்னையா..?