மகிமாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஈரோடு  மகிமாலஸ்வரர் கோயில் 46ம் ஆண்டு சித்திரை சதய விழா மற்றும் தேர்த்திருவிழா  கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.  காலை 7 மணிக்கு அப்பரடிகள் குரு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை 27ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சி  நடக்க உள்ளது. வருகிற 30ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகின்றது. …

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!

குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து