மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

 

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோயில், மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சுந்தர பெருமாள் கோவில் கிராம நாட்டாமைகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி