Friday, September 20, 2024
Home » மகளை கட்டிக் கொடுக்காததால் ஆத்திரம்: அக்கா வீட்டில் மண்ணெண்ணெய் குண்டை வீசிய இன்ஜினியர் கைது

மகளை கட்டிக் கொடுக்காததால் ஆத்திரம்: அக்கா வீட்டில் மண்ணெண்ணெய் குண்டை வீசிய இன்ஜினியர் கைது

by kannappan

மதுரை: மகளை கட்டிக் கொடுக்காத ஆத்திரத்தில், அக்கா வீட்டில் மண்ணெண்ணெய் குண்டை வீசிய இன்ஜினியர் கைதானார். மதுரை அருகே மேலக்காலை சேர்ந்தவர் ராஜா மகன் தீபன் சக்கரவர்த்தி(33). இன்ஜினியரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மதுரை செல்லூர் பகுதியில் இவரது அக்கா வசித்து வருகிறார். இவரது 22 வயதான மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட தீபன் சக்கரவர்த்தி, பெற்றோர் மூலம் பெண் கேட்டுள்ளார். 11 வயது வித்தியாசம் இருப்பதாக கூறி, திருமணத்திற்கு பெண் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த தீபன்சக்கரவர்த்தி நேற்று முன்தினம் சகோதரி வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டிலிருந்த இவரது சகோதரி மற்றும் உறவினர்கள், “பெண் விஷயமாக, இனிமேல் இங்கு வரக்கூடாது’’ எனக்  கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி, மண்ணெண்ணெய் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினார். பாட்டில் வெடித்து சிதறியதால், அங்கு தீ விபத்து  ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து, பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிந்து, தீபன்சக்கரவர்த்தியை கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

eighteen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi