Wednesday, July 3, 2024
Home » மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது

மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது

by kannappan

கமுதி:  ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கிழக்கு அபிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராக்கு(60). இவரது மகன் வினீத்(25). இவரும் அப்பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரத்தின் 21 வயதான மகளும் காதலித்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம் தனது மகளை காணவில்லை என்று அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அப்போது வினீத், காதலியை அழைத்துச் சென்று வெளியூரில் வைத்து திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கண்ணாயிரம், வினீத்தின் வீட்டுக்கு சென்று, அவரது தாயார் ராக்குவிடம் மகளை கடத்தி சென்றது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தார். இதுபற்றி அபிராமம் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணாயிரத்தை கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi