Friday, July 5, 2024
Home » மகளிர் டி20 தொடர்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

மகளிர் டி20 தொடர்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

by kannappan

தம்புல்லா: இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி ஆறுதல் வெற்றிப் பெற்றது. இலங்கைச் சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்டி டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டங்களில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற் றியது.இந்நிலையில் கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் நேற்று தம்புல்லாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் களமிறங்கினர். கேப்டன் ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காமல் 39*(33பந்து), ஜெமீமா 33(30பந்து) ரன் எடுக்க இந்தியா 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு  138ரன்னை எட்டியது.அதனையடுத்து 139ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் களம் கண்டனர். ஒருக்கட்டத்தில் 5 ஓவரில் 2விக்கெட்களை இழந்து 37ரன் எடுத்து தடுமாறியது. ஆனால்கேப்டன் சமரி, நீலாக்‌ஷி இணையின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை 17ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணி 3 விக்கெட் மட்டும் இழுந்து 141ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. சமரி ஆட்டமிழக்காமல் 80*(48பந்து), நீலாக்‌ஷி 30ரன் எடுத்தனர்.  இந்த ஆறுதல் வெற்றியின் மூலம்  இலங்கை, 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் தொடரை இழந்தது.  இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் ஜூலை ஒண்ணாம் தேதி பல்லேகலேவில் தொடங்குகிறது….

You may also like

Leave a Comment

seven + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi