மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.24 லட்சம் கடனுதவி வழங்கல்

தேனி, நவ. 5: தேனி அருகே காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நேரடி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கூட்டுறவு சார்பதிவாளர் முத்தையா கலந்து கொண்டு 24 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை கடனாக வழங்கினார்.

அப்போது, அவர் கூறும்போது, இந்நிதியாண்டில் கடந்த ஜூலை 31ம் தேதி 68 பேருக்கு ரூ.60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், நேற்று 24 பேருக்கு ரூ.24 லட்சம் கடன் வழங்கப்பட்டதையடுத்து, இந்தாண்டு ரூ.84 லட்சம் நேரடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் ராமர் மற்றும் சங்க பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி