Saturday, July 6, 2024
Home » மகன்கள் மீதான வழக்கை முடித்து வைக்க கோரி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண்கள் மனு

மகன்கள் மீதான வழக்கை முடித்து வைக்க கோரி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண்கள் மனு

by Ranjith

 

ஈரோடு, ஜூலை 3: தங்களது மகன்களது மீதான வழக்குகளை முடித்துவைக்க கோரி இலங்கைத்தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண்கள் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இம்முகாமை சேர்ந்த சாந்தமலர், மேரிஜெனிந்தா ஆகியோர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது மகன்கள் ராபின்சன் (23), ஜெமிக்சன் (24), விதுசன் (26), ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா வைத்திருந்ததாக அறச்சலூர் போலீசார் கடந்த 2021 அக்டோபரில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், சார்ஜ்ஷீட் வழங்கவில்லை. இந்நிலையில், நாங்கள் எங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லவிருப்பதால் எங்கள் மகன்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை கேட்டுக் கொண்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் மகன்கள் மீதான வழக்கை முடித்துவைத்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

15 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi