மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து சாவு

சத்தியமங்கலம்: பவானிசாகர் மெக்கானிக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வர்ஷலாவுக்கு (58). உடல்நிலை சரியில்லாததால் அவரது இளைய மகன் வினோத் (24) தனது பைக்கில் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். தொட்டம்பாளையம் அருகே சென்றபோது, லோ பிரஷர் காரணமாக பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வர்ஷலா திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வர்ஷலா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்