போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

 

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பரவாக் கோட்டை காவல் நிலையத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர் ந்த ரமேஷ் கண்ணன் (50) என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந் தார். இவர் பொது மக்கள் மற்றும் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வந்த புகார்களின் பேரில் இவரை எஸ்பி சுரேஷ்குமார் பலமுறை எச்சரித்தும் அதையும் மீறி தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர் திரு வாரூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு மூன்று மாதங்கள் பணியாற்றிய பிறகு அவர் மீண்டும் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மீண்டும் ஒழுங்கீன செயல் களில் ஈடுபட்டு வந்ததால் அவரை நிர்வாக காரணங்களுக்காக மாவட்டஎஸ்பி சுரேஷ் குமார் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச் சந்திரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி