நாமக்கல், ஜூலை 13: நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் எஸ்ஐக்கள் முதல் ஏடிஎஸ்பிக்கள் வரையிலான அதிகாரிகளுக்கு, ஆயுதப்படை மைதானத்தில், கை துப்பாக்கியை கையாளும் விதம் குறித்த பயிற்சியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் நேற்று அளிக்கப்பட்டது. இதில், எஸ்ஐகள் மற்றும் ஏடிஎஸ்பிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.