போலீஸ்காரர்மனைவி தற்கொலை

கோவை, ஏப்.9: கோவை பாலசுந்தரம் ரோடு போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர், கோவை மாநகர போலீசில் ஏட்டாக உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி (43). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், டாக்டர்கள் கொடுத்த மருந்து மாத்திரைகளை சரியாக உட்கொள்ளாமல் இருந்து வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இவரது கணவர் பால்ராஜ் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி, வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த திரவத்தை எடுத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜெயந்தி இறந்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை