சிவகாசி, செப்.2: சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் மனைவி சத்தீஸ்வரி(55). இரு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள் தேடி வந்த நிலையில் சத்தீஸ்வரி அவரது வயலில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்தனர். புதுக்கோட்டை வி.ஏ.ஓ மாரீஸ்வரன் புகாரின்படி சத்தீஸ்வரியின் உறவினர்கள் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.