புதுச்சேரி: புதுச்சேரி சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ரிஷிகுமார் என்ற ரிஷி (23). ரவுடியான இவர் மீது 2 கொலை மற்றும் வெடிகுண்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை மீண்டும் ஊரில் நுழைய தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு காவல்துறை பரிந்துரைக்க முடிவெடுத்திருந்த நிலையில், காராமணிக்குப்பத்தில் தனியார் மருத்துவமனை அருகே முன் பகை காரணமாக ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ரவுடி ரிஷிகுமாரை தேடி வந்தனர். இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு ரவுடியை சுற்றி வளைத்தனர். அதிர்ச்சியடைந்த ரிஷி, அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாததால் உடனே தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தில் தனக்கு தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை உடனே தடுத்து அவரை காப்பாற்றிய போலீசார், அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ரவுடி ரிஷி மீது தற்கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….