வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாராண்யம் உபகோட்டத்திற்க்கு உட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம், ஆயக்காரன்புலம் துணை மின் நிலையம், வேட்டைகாரன் இருப்பு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (16ம்தேதி) நடக்கிறது. எனவே வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ள பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை (16ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.