போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் கைது

 

திருச்சி, செப்.6: திருச்சியில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ்.மங்கலம் அனந்தூர் ஆயிஷா நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(37). இவர் கடந்த 3ம் தேதி இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்தார்.

அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தந்தை பெயர், முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் சாகுல் ஹமீதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்