Wednesday, October 23, 2024
Home » போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ₹ 1 லட்சம் மோசடி

போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ₹ 1 லட்சம் மோசடி

by Mahaprabhu

திண்டிவனம், டிச. 21: மயிலம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்க நகையும் வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்யதனர். அவரிடம் இருந்து 17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மயிலம் அடுத்த தொள்ளமூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சக்திவேல் (32). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (27) என்பவரிடம், கடந்த அக்டோபர் 5ம் தேதி ஏடிஎம் கார்டை கொடுத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வரும் படி கூறியுள்ளார். இதனால் ராஜலட்சுமி பெரும்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளார். பணம் வராததால் அருகேயிருந்த ஒருவர் பணம் எடுத்து தருவதாக கூறி, ஏடிஎம் கார்டை வாங்கி பணம் வரவில்லையென மற்றொரு போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார். பின்னர் சிறிது நேரம் கழித்து சக்திவேல் செல்போனுக்கு 50 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.இந்நிலையில் சக்திவேல், ராஜலட்சுமியை தொடர்பு கொண்டு 50 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது என தெரிவித்ததையடுத்து, ராஜலட்சுமி நான் பணம் எடுக்கவில்லை. ஏடிஎம்மில் பணம் வராததால் வீட்டுக்கு வந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் ஏடிஎம் கார்டை பார்த்தபோது போலியான ஏடிஎம் கார்டு என தெரியவந்தது. இது குறித்து சக்திவேல் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வானூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 50 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியிலுள்ள தனியார் நகைக்கடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்க நகையை மர்ம நபர் வாங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து டிஎஸ்பி தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த பாசி பட்டினம் பகுதியை சேர்ந்த சையத் முகமது மகன் சையத் இப்ராஹிம் (36) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், பெரும்பாக்கம் பகுதியில் போலி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 17 போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சையத் இப்ராஹிம் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi