பூந்தமல்லி: சென்னை போரூர் டிரங்க் சாலையில் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தை சென்னை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் தேவராஜ் ஆய்வு செய்தார். அப்போது மருந்தகத்தின் கணக்கு வழக்கினை ஆய்வு செய்தபோது, ரூ10 லட்சத்து 47 ஆயிரம் அளவுக்கு மருந்துகள் இருப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு ரூ5 லட்சத்து 46 ஆயிரம் அளவுக்கே மருந்துகள் இருப்பு இருந்துள்ளன. இது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். இதுகுறித்து போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அம்மா மருந்தக ஊழியர்களான போரூரைச் சேர்ந்த சுபாஷினி(43), கே.கே.நகரைச் சேர்ந்த கிறிஸ்டோபர்(45) இருவரும் ரூ5 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்….