போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சகத்தின் பழுதடைந்த காலி குடியிருப்பில், போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புதுவண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த், காசிமேடு வினாயகபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த முகமது ஆசிக், ஜாவித் செரிப் எனவும், இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள், குட்கா, 2 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது