போதை மாத்திரைகள் என்று கூறி வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் வெளியூரிலிருந்து வந்து போதை மாத்திரைகளை மர்ம நபர் ஒருவர் விற்று வருவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மதியம் மூலக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகள் 300 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், திருச்சியை சேர்ந்த சுபாஷ்(19), என்பதும் மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதை மாத்திரைகள் என்று கூறி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்….

Related posts

ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது