போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

 

கோவை, ஜன 14: 100 சதவீதம் போதை பொருட்களை தடுக்கும் விதமாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்கும் விதமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது. இதில் 16 வயது முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவரும் சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார். நிகழ்ச்சியில், சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, சாடிவயல், ஈஷா யோகா சென்று அடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு