போதை பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்

 

பெரம்பலூர், செப். 13: போதை பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி பாலமுருகன் பேசினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக, பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் போதைப் பொருள் உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மது விலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியதாவது:மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சிலர் தவறான வழியில் செல்லுகின்றனர். அவர்கள் அத்தகைய பழக்கத்தில் இருந்து வெளிவந்து உடல் நலத்தை பேணிக்காத்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்பது அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாது அனைவரின் விருப்பமாக உள்ளது.

போதை பொருட்களுக்கு அடிமையாவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து, மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.எனவே போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று மாணவர் களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாண விகள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி